தமிழர்களின் வரலாற்று பாரம்பரியம், கலை, கலாசாரத்தின் அடியொற்றியதான பண்பாடுகள் பல இன்றைய நவீன யுகத்தில் மாற்றமடைந்து வருகின்றது என்கின்ற தோற்றப்பாடுகளுடன் கூடிய அறிக்கைகள் அமைந்தாலும் எங்கோ ஒரு மூலையில் தமிழ் சமூகத்தின் கலைகள் அரங்கேரிக்கொண்டு மரபுகளையும் மரபுக்கலைகளையும் பேணிப்பாது பாதுகாத்துக் கொண்டுதான் செல்கின்றதை அவதானிக்க முடிக்கின்றது.
அந்த வகையில் வரலாறு, பாரம்பரியம், கலை, கலாசாரங்களை இன்றைய காலகட்டத்திலும் தொன்மை மற்றும் மரபு மாறாமல் பேணிக்காத்து வருகின்ற மட்டக்களப்பு சித்தாண்டிக்குடி என அழைக்கப்படும் சிகண்டி முனியின் அருட்கடாச்சம் பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயம் அமைந்துள்ள சித்தாண்டி கிராமத்தில் அமைந்துள்ள சிகண்டி அறக்கட்டளை பண்ணிசை பாடசாலையினால் ஒழுங்குபடுத்தப்பட்டு அற்கேற்றப்பட்ட வசந்தன் கூத்து அறங்கேற்றம் நேற்றைய தினம் (12) மாலைவேளை ஆலய முன்றலில் இடம்பெற்றது.
குறுகிய காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பண்ணிசைப் பாடசாலையில் பரதம், நடனம், கூத்துக்கலை, பண்ணிசை ஓதல், அறநெறி போன்ற பல்வேறுபட்ட கலைவடிவங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில் வசந்தன் கூத்து அறங்கேற்றமானது முதல் தடவையாக இடம்பெற்றது.
இந்த அறங்கேற்றமானது சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய முன்றலில் முருக வணக்கத்துடன் ஆரம்பமாகி இதில் 'பிள்ளையார் வசந்தன், குயில் வசந்தன், களரி வசந்தன், குறத்தி வசந்தன்' முதலிய வசந்தன்கள் அரங்கேற்றப்பட்டன. இதனை சிறப்பாக அமைவதற்கு வழிநடாத்திய தநா.சோதிநாதன் (நெறியாழ்கை), கி.பாக்கியராஜா (பாடலாசிரியர்), கி.இராஜதுரை (அண்ணாவி), கு.விநாயகமூர்தித்தி(பின்னணிப் பாடல், திருமதி.மங்கம்மா சோதிநாதன் (பண்ணிசை அக பாடசாலை அதிபர்) ஆகியோரின் முயற்சியினால் அறங்கேற்றப்ப்டடது. குறித்த வசந்தன் கூத்தானது கல்வி கற்றுக்கொண்டிருக்கமு; மாணவர்களைக் கொண்டு வடிவமைக்கபட்டதுடன். இந்நிகழ்வுக்கு நூற்றுக்கணக்கானவாகள் கண்டுகளிப்பதற்கு வருகைதந்திருந்தனர்.
குறித்த பண்ணிசை அகம் பாடசாலைக்கு பல்வேறுபட்ட தேவைப்பாடுகள் மற்றும் உதவிகள் தேவைப்பாடாக இருந்தாலும் ஒரு சில உதவி செய்த அன்பர்களினால் வாத்தியப் பொருட்களும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக