வியாழன், 29 செப்டம்பர், 2016

மகாத்மா காந்தி அடிகளாரின் 147 வது ஜெயந்தி தின நிகழ்வுகள்


மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில்  மகாத்மா காந்தி அடிகளாரின் 147 வது  ஜெயந்தி தின நிகழ்வுகள் எதிர்வரும் 02ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் காலை 9.00மணிக்கு பஐனை பாடல்களுடன் காந்திப் பூங்காவிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கும் நிகழ்வு நடைபெறும். 

அதனைத் தொடர்ந்து காலை 9.45 மணியளவில் மாநகர பொது நூலக கேட்போர் கூடத்தில் ஜெயந்தி தின நிகழ்வும் நினைவுப்பேருரையும் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி.அ.செல்வேந்திரன் தலைமையில் நடாத்தப்படவுள்ளது. 

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624919

Translate