வியாழன், 22 செப்டம்பர், 2016

இவரைக் காணவில்லை. திக்கோடையில் சம்பவம்.

(பழுவூரான்)
 மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை – தும்பாலை கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை – மாமாங்கம் என்பவரை கடந்த 19.09.2016ம் திகதியில் இருந்து காணவில்லை. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

திக்கோடை தும்பாலையை பிறப்பிடமாகக் கொண்ட 46 வயதுடைய க.மாமாங்கம் என்பவர் கடந்த 19.09.2016ம் திகதியிலிருந்து காணமல் போயுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் 19.09.2016 அன்று வைத்தியசாலைக்கு செல்வதற்கு சென்றவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை. இவர் வைத்தியசாலைக்கு சென்றதற்கான ஆதாரங்கள் வைத்தியசாலையில் இல்லை. (பெயர்பட்டியல்) இது தொடர்பாக வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் இவரைத் தேடும்பணியில் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரை யாராவது கண்டால் இத்தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு அவரின் குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர். 0776201665

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624966

Translate