(வாசு)
இலங்கை பொலிஸ் ஆரம்பிக்கப்பட்டு 150 ஆண்டு நிறைவு வைபவம் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் இன்று (03.09.2016) சனிக்கிழமை காலை 07.30 மணிக்கு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம் பெற்றது.இதன் போது பொலிஸ் கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து பொலிஸ்கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸ்மா அதிபரின் செய்தியினை நிலையப்பொறுப்பதிகாரியிளால் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
இவ் ஆண்டு நிறைவு விழாவிற்கு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிறுகுட்பட்ட சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கவிடயம்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக