தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விரதமும் திருவிழாவும் ஆவணி சதுர்த்தி தினமான (05.09.2016) அன்று திங்கட்கிழமை காலை விரம் அனுட்டிக்கும் அடியவர்களுக்கு சங்கர்ப்பம் பண்ணும் நிகழ்வுடன் ஆரம்பித்தது அதனை தொடர்து மாலை 04.30 மணியளவில் தேற்றாத்தீவு வட பத்திர காளி அம்பாள் ஆலயத்தில் இருந்து சந்தணகுடபனி ஆரம்பித்து தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் முல மூர்திக்கு சந்தணாபிஷேகம் இடம் பெற்றது.
ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பிக்கும் முகமாக சமய பேச்சுக்கள் மற்றும் பஜனை நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.அதனை தொடர்ந்து பிள்ளையாருக்கு விசேட பூஜையும் வசந்த மண்டபபூஜையும் சுவாமி உள்வீதியுலா வருகைகையும் இடம் பெற்று முடிந்ததும், விரதம் அனுட்டிக்கும் அடியார்கள் தெப்பையை ஆலய குருவிடம் ஒப்டைத்து ஆசிர்வாதமும் பெற்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக