வெள்ளி, 5 ஜூன், 2015

உதைபந்தால் முன்னேறி முதலிடத்துக்கு வந்த மட்டக்களப்பு கடுக்காமுனை மாணவிகள் (photos


மட்டக்களப்பு மேற்கு வலயப் பாடசாலையான கடுக்காமுனை வாணி வித்தியாலய 19 வயதுக்கீழ்ப் பிரிவுப் பெண்கள் அணியினர் மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.


முதலிடம் பெற்றதையிட்டு அங்கு நேரில் சென்ற வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் அவரகளும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞ.சிறிநேசன் அவர்களும் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த மாணவர்களையும், அவர்களுக்கு சகலதுறைகளிலும் உதவியும் ஊக்கமும் அளித்த ஆசிரியர்களையும், அதிபர் அவரையும் விசேடமாக பாராட்டியதுடன். வெற்றி பெற்ற வீராங்கனையாகிய நீங்கள் வரவிருக்கும் தேசிய மட்டத்திலும் இவ்வாறானதொரு வெற்றியை பெறுவீர்களாயின் உங்கள் எதிர்கால பல்கலைக்கழக, கல்வியியல் கல்லூரி அனுமதிக்கும் இவ் சான்றிதழ்கள் புள்ளிகளை பெற்றுத்தரும். என கூறி உற்சாகம் ஊட்டியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate