(சித்தாண்டி நிருபர்) மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட புலிபாய்ந்தகல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வானது பாடசாலையின் அதிபர் கந்தலிங்கம் சத்தியவரதன் தலைமையில் நடைபெற்றது.
நகரப் பாடசாலைகளுடன் போட்டிபோடும் அளவுக்கு குறித்த பாடசாலையின் மாணவர்கள் அனைவரும் பல்வேறு விளையாட்டுக்களில் பங்குபற்றி மிகவும் சிறப்பானதொரு நிகழ்வை நடாத்தியிருந்தனர்.
குறித்த பாடசாலையில் வளப்பற்றாக்குறை காணப்பட்டாலும் அனைத்தையும் சாமாளித்துக்கொண்டு இம்முறை சிறப்பானது வெளிக்காட்டலை விளையாட்டுப்போட்டி நிகழ்வில் முன்னெடுத்தது மட்டுமல்லாது வலயத்திற்குள் சிறப்பானது இயற்கையாகவே சிறப்பானதொரு பச்சை புல் நிரம்பிய மைதானத்தையும் கொண்டிருந்தமை அனைவரையும் கவர்ந்திருத்தது. உண்மையில் எதிர்காலத்தில் இவ்வாறான மைதானத்தில் கோட்ட மட்ட விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதன் ஊடாக மாணவர்களுக்குரிய விளையாட்டுக்களை ஒழுங்கான முறையில் செய்துமுடிக்கலாம் என பலரும் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையில் பல்வேறுபட்ட குறைபாடுகள் காணப்படும் நிலையில் அதிகளவான குறைபாடுகளையும் இந்த ஆண்டுக்குள் நிறைவடைய செய்யும்மா? கல்வியின் பால் அக்கறைகொண்ட எமது சமூகம் என்ற கேள்வியும் இப்பாடசாலையில் எழுந்திருக்கின்ற நிலையில் கிராமப்புறத்தில் இவ்வாறு பின்தங்கியிருக்கும் பாடசாலைகளையும் அங்கு கல்வி கற்கும் மாணவர்களையும் முன்னேற்றம் செய்யவேண்டும் என நினைத்தால் குறைபாடுகளை நிறைவேற்ற அனைவரும் கைகோர்ப்பது எதிர்கால் கல்விச் சமூகத்துக்கு நல்லதோர் ஆரோக்கியமான விடயமாக அமையும் எனலாம்.
நடைபெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், அதிதிகளாக வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, கோறளைப்பற்றுத் தெற்கு உதவிப் பிரதேச செயலாளர் ஜி.அருண் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம், வலயக்கல்வி அலுவலக உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சுபாஸ்சந்திரன் கலந்துகொண்டனர். மற்றும் ஏனைய அதிதிகளாக ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளர் க.பாலச்சந்திரன், கோறளைப்பற்றுப் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக