வியாழன், 31 டிசம்பர், 2015

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 340 பேருக்கு தண்டனை


மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இருப்பினும்மதுபோதையில் வாகனங்களைச் செலுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்ற தண்டனைக்குட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.டபிள்யூ.சி.பீ.கே.டி.சில்வா தெரிவித்தார்.
இப்பிரிவில் கடந்த வருடத்தில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 340 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2014ஆம் ஆண்டில் 68 குற்றங்களும் 2013ஆம் ஆண்டில் 11 குற்றங்களும் 2012ஆம் ஆண்டில் 16  குற்றங்களும் பதிவாகியுள்ளன.

2014ஆம் ஆண்டு 107 வீதி விபத்துகள் பதிவாகியுள்ள அதேவேளை, கடந்த வருடம் 70 வீதி விபத்துகளே பதிவாகியுள்ளன.

வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த வருடம் 28,466 குற்றங்களும் 2014ஆம் ஆண்டு 23,632 குற்றங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624845

Translate