'யாரோ பிள்ளையைப் பெற்று வைக்க நாங்கள் பதிவு வைக்க வந்திருக்கின்றோம். ஆகவே இந்த அரசாங்கம் இதனை உணர்ந்துகொண்டு ஆயிரம் பாடசாலைகளுக்கு அப்பால் இன்னும் அதிகப்படியான பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை கொண்டுவந்து செயற்படுத்தி காட்ட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு மத்திய கல்லூரி தொழிநுட்ப ஆய்கூடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாங்கள் பேசும் போதும் செயற்படும் போதும் நீதியாக நியாயமாக தர்மத்தின் வழியிலே சில விடயங்களை சொல்லித்தான் ஆக வேண்டும். என்னவென்றால் இங்கு கொண்டுவரப்பட்ட ஆயிரம் பாடசாலைத்திட்டம் முன்பிருந்த அரசாங்கதம்தான் இந்த ஆயிரம் பாடசாலை திட்டத்தினை கொண்டுவந்தது. மாகாண சபை அரசாங்கம் பாடசாலைகளை அனுப்பியிருந்தாலும் இந்த திட்டத்தினை மத்திய அரசாங்கம் செயற்படுத்தியமையினால் நாங்கள் தான் இந்த பாடசாலைப் பட்டியல்களைப் பார்த்து அங்கீகாரம் வழங்கினோம். ஆனால் முன்பிருந்த அரசாங்கம் எங்களை இதன் ஆரம்ப நிகழ்வான கல்லுவைக்கும் நிகழ்விற்கு கூட அனுமதி வழங்கவில்லை.
ஆனால் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் பிரதி அமைச்சரிடம் நான் கூறியிருந்தேன் 'நீங்கள் கல்லு வையுங்கள் நாங்கள் திறக்க வருவோம் என்று' இன்று நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு திறந்து வைத்திருக்கின்றோம் அதனையிட்டு நாங்கள் பெருமை கொள்கின்றோம்.
உண்மையில் இந்த அரசாங்கம் ஒருவருடத்தை அண்மிக்கிறது. ஆனால் இந்த ஒரு வருடத்திற்குள் என்ன சாதிக்கப்பட்டது என்றால் பெரும்பாலும் குறைவுதான். ஏனென்றால் தற்பாது இரண்டு கட்சிகள் இருக்கின்றது. அவர்கள் கட்சியை பலப்பபடுத்தும் ஆர்வம்தான் தற்போது அதிகமாக இருக்கின்றது. இதனால் முன்பிருந்த அரசாங்கம் மேற்கொண்ட பணிகளைத்தான் இவர்கள் இன்று திறந்து வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
கிரானிலே கல்வி இராஜங்க அமைச்சர் கலந்து கொண்ட தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழாவிலே நானும் கலந்துகொண்டேன். அங்கே பகிரங்கமாக கூறியிருந்தேன். 'யாரோ பிள்ளையைப் பெற்று வைக்க நாங்கள் பதிவு வைக்க வந்திருக்கின்றோம் என்று கூறியிருந்தேன். ஆகவே இந்த அரசாங்கம் இதனை உணர்ந்துகொண்டு ஆயிரம் பாடசாலைகளுக்கு அப்பால் இன்னும் அதிகப்படியான பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை கொண்டுவந்து செயற்படுத்தி காட்ட வேண்டும். அதுதான் அதன் திறமையில் இருக்கின்றது. இதற்குள் மாகாண அமைச்சையும் உள்வாங்கி இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் இதுதான் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
இன்று நாங்கள் அரசாங்கத்தின் பங்காளிபள் என்று பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முடித்துத் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றேபாம் அவை இன்னும் முடித்து தரப்படாமலே இருக்கின்றது. அண்மையில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட வெபர் விளையாட்டு அரங்கு கூட முன்னாள் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தியாகும். முன்னாள் முதலமைச்சர் ஊடகவியலாளர்களை சந்தித்த போது கூட கூறியிருந்தார் நாங்கள் அடிக்கல் வைத்ததையெல்லாம் அவர்கள் திறந்து வைக்கி;றார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலைமை வரும் என்று அவர் யோசியாமல் இருந்திருக்கின்றார். அவர்கள் இனியும் வந்து கல்லு வைக்கும் நிலைமை வராது அதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆனாலும் நாங்கள் எதுவிதமான பேதமுமின்றி செயற்படுவோம். முன்பெல்லாம் பாடசாலைகளில், அலுவலகங்களில் அரசியலை திணித்தார்கள். இப்போது அவ்வாறல்ல, பாடசாலைகள் சுதந்திரமாக செயற்பட வேண்டும், அதிகாரிகள் சுதந்திரமாக செயற்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். நாங்கள் தலையிடமாட்டோம். உங்கள் கடமைகளை தவறாமல் செய்தால் போதும். பிழைகள் விடப்படும் சந்தர்ப்பமத்தில் நாங்கள் வந்து கேட்போம். எனக்கூறினார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக