புதன், 13 ஜூலை, 2016

ஈழத்து மேடை நாடக, வானொலி, திரைப்படக் கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் அவர்கள் மறைந்தார்

இலங்கையில்வானொலி - மேடை -திரைப்படம் - தொலைக்காட்சி என யாவற்றிலும் வலம் வந்து கலாரசிகர்களை தன் நகைச்சுவையால் மகிழ்வித்து வந்த இலங்கை மணித்திருநாட்டின் ஒப்பற்றதோர் கலைஞர் 'மரிக்கார்' எஸ்.ராம்தாஸ் அவர்கள் காலமானார் என்ற செய்தி எம் எல்லோரையும் கதிகலங்க வைத்துள்ளது. கோமாளிகள் கும்மாளம் எனும் வானொலித்தொடர் மூலம் இலங்கை வானொலி நேயர்கள் அனைவரையும் கவர்ந்து கொண்ட கலைஞர்களில் மரிக்கார் என்ற பாத்திரம் ஏற்று நடித்த எஸ்.ராம்தாஸ் அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்

.

ஈழத்தில் வெளிவந்த கோமாளிகள் - ஏமாளிகள் திரைப்படங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தார். 1989 முதல் ஐரோப்பியநாடுகளுக்கான இலங்கைக் கலைஞர்களின் கலைச்சுற்றுலாவில் பங்கு பற்றிச் சிறப்பித்தவர். அண்மைக்காலமாக உடல் உபாதையுற்றிருந்த போதிலும் கலைத்தாகத்துடனேயே காட்சி தந்தார். ஈழத்துக்கலையுலகின் ஓர் அடையாளமாகக் காட்சி தந்த கலைஞர் எஸ்.ராம்தாஸ் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.1974 மே மாதம் 5ம் திகதி பிறந்த இவர் தனது 69 வயதில் சென்னையில் காலமானர்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624968

Translate