வெள்ளி, 22 ஜூலை, 2016

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு

கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை கிழக்கு ஊடகவியலாளர்களின் ஒன்றியம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள், அரசியலமைப்பு மற்றும் உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள், ஊடக நெறிமுறைகள், ஊடகம் புகைப்பட நெறிமுறைகள், முரண்பாட்டிலிருந்து மீளும் நிலையில் ஊடகங்களின் பொறுப்பு, பிரஸ் கவுன்சில் மற்றும் ஒழுங்குவிதிகள், அவதூறு வழக்குகள்: ஊடகங்கள், உரிமைகள், அவதூறு மற்றும் நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன.


இந்த ஊடகச் செயலமர்வில் பங்கு கொள்ள விரும்பும் மட்டக்களப்பு, அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் easternpressclub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தங்களது சுயவிபரக்கோவைகளுடனான விண்ணப்பங்களை அனுப்பி பங்குபற்றலுக்கான உறுதிப்படுத்தல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
கிழக்கிலிருந்து காத்திரமானதொரு ஊடகத்துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நடத்தப்படுகின்ற இச் செயலமர்வில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மட்டுமே செயலமர்வில் உள்ளடக்கப்படுவார்கள் என்பதால் முன்கூட்டியே தம்மை பதிவுசெய்துகொள்ளுமாறு ஒன்றியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624975

Translate