வெள்ளி, 29 ஜூலை, 2016

29.07.2016- இன்றுமுதல் தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு இரண்டாம்தவணைவிடுமுறை

நாட்டிலுள்ள தமிழ் சிங்கள அரசபாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று 29ஆம் திகதி முதல் மூடப்படுகின்றன என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.இப்பாடசாலைகளில் இன்றுவரை இரண்டாம்தவணைப்பரீட்சைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இதனால் இத்தவணைக்கான மாணவர் முன்னேற்றஅறிக்கையை இன்று வழங்கமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு பாடசாலைகள் தள்ளப்பட்டுள்ளன.


மூன்றாம் தவணைக்காக மேற்படி பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.இதேவேளை நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் நோன்புப்பெருநாள் விடுமுறைக்காக கடந்த 06.06.2016முதல் 06.07.2016வரை மூடப்பட்டிருந்தது .கல்விச்செயற்பாடுகளுக்காக கடந்த 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டன.

1ஆம் திகதி திங்கள் முதல் இரண்டாம்தவணைப்பரீட்சை நடைபெறவிருக்கின்றது.11ஆம் திகதி வரை இது தொடர்ந்து நடைபெறும்.இரண்டாம்தவணைக்கான விடுமுறை 12.08.2016இல் விடப்பட்டு மீண்டும் மூன்றாம்தவணைக்காக 22.08.2016இல் திறக்கப்படும்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624933

Translate