செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

மட்டு. பொருளாதார மத்திய நிலையம். மாகாண சபையில் தனிநபர் பிரேரணை.

(ரூபதாஸ்)
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது நான் தனிநபர் பிரேரணை ஒன்றிணை கொண்டுவரவுள்ளளேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். இன்று (08.08.2016) போரதீவுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தும்பங்கேணியில்
வளர்பிறை நன்னீர் மீன் அறுவடை விழாவின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கே அவர் உரையாற்றுகையில், 
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது நான் தனிநபர் பிரேரணை ஒன்றிணை கொண்டுவரவுள்ளளேன். அதாவது,; மூன்று மாவட்டங்கள் உள்ள இந்த கிழக்கு மாகாணத்தின் மத்தியில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிரவரும் வருடம் மத்திய அரசாங்கத்தினூடாக ஒதுக்கப்படும் நிதியில் இருந்து பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைக்க நான் எதிர்வரும் 25.08.2016 அன்று இடம்பெறும் மாகாண சபை அமர்வில் தனிநபர் பிரேரணை ஒன்றிணை கொண்டு வரவுள்ளேன். இறைவனின் ஆசியால் அது ஏகமனதாக நிறைவேற்றப்படும் என நினைக்கின்றேன். அதனூடாக அடுத்த வருடத்திலாவது கிழக்கு மாகாணத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு எங்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் அங்கு நல்ல விலைக்கு சந்தைப்படுத்தப்பட வேண்டும். இந்த பொருளாதார மத்திய நிலையம் எமது மாவட்டத்தில் அமையுமாக இருந்தால் நுகர்வோர் கூட வெளிமாவட்ட உற்பத்தி பொருட்களை குறைநந்த விலையில் பெற்றுக் கொள்வது மாத்திரமல்லாமல் எங்களது பிரதேசங்களில் விளையும் விவசாய உற்பத்திப்பொருட்கள், மீனுற்பத்திப் பொருட்களோ நல்ல விலையில் சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பு வரும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். என தெரிவித்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624953

Translate