(சுஜா)
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூறாவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நேற்று புதன் கிழமை (10) பல நிகழ்வுகள் நடைபெற்றன.
வருடாந்தம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியாலைத் தினம் கொண்டாடப்பபட்டு வருகின்றது.மேற்படி வைத்தியசாலை வளாகத்தில் அமையப் பெற்றுள்ள ஆலயத்தில் பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இரத்த தான நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் இவ்வைத்திய சாலையில் மிக நீண்டகாலமாக நிலவிவந்த விசேட வைத்திய நிபுணர்கள் தங்குமிடத்திற்குரிய இரண்டு மாடிக் கட்டடத்திற்குரிய அடிக்கல் நடப்பட்டது இக்கட்டடம் 11 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அடையப்பெறவுள்ளது.அதனைத் தொடர்து இதுவரை காலமும் பிராந்திய சுகாதாரப் பணிமiனியில் மாத்திரம் நடைபெற்றுவந்த தடுப்பூசி போடும் நிகழ்வு வைத்தியசாலைகளுக்கும் விஸ்த்தரிக்கப ;பட்டுள்ளதனால் தடுப்பூசிபோடும் பிரிவும் இதன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் கிரேஸ் நவரெட்ணராஜா பிரதம அதிதியாக இதன்பொது கலந்து கொண்டிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள், கிராம பெரியோர்கள், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக