புதன், 23 டிசம்பர், 2015

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் முச்சக்கர வண்டி சாரதிகளால் இன்று புதன்கிழமை காந்தி பூங்காவுக்கு எதிரே ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வாகனங்களுக்கு வழங்கப்படும் வீதி அனுமதிப்பத்திரத்தை முச்சக்கர வண்டிகளுக்கும் பெறுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் புதிதாக முச்சக்கர வண்டிகள் பயணிக்கும் வீதி அனுமதி மீள்பதிவுக்கு நடைமுறைப்படுத்தப்படது.
ஸ்ரீலங்காவின் எப்பகுதியிலும் நடைமுறையில் இல்லாமல் இருக்கும் இப்பதிவினை மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த நடைமுறை ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை இறுதியாக சேர்த்துக் கொள்ளுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் மகஜரொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate