ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பிக்கப் வாகன டயரில் சிக்கி இருவர் படுகாயம் - தேற்றாத்தீவில் சம்பவம்


களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்டபட் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் வீதி விபத்து ஏற்பட்டு இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியிலேயே நேற்று (26.12.2015) சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பிக்கப் வாகன டயரில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்கா மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624939

Translate