மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்; நான்கு வருடங்களுக்கு முற்பட்ட வழக்குகளை விரைவுபடுத்த உத்தரவு நேற்றுத் திங்கட்கிழமை சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்; நான்கு வருடங்களுக்கு முற்பட்ட வழக்குகளை விரைவுபடுத்த உத்தரவு (17.10.2016) திங்கட்கிழமை சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜாவின் நடவடிக்கையினால் மேற்படி வழக்குகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களாக முகுந்தன் ஜெயபாலன்;, சுதாகரன் ஜெயபாலன், மாமாங்கராஜா ஆனந்தராசா, தேவன் ஆனந்தராசா ஆகியோரை கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறும் பெண் ஒருவரைக் கடத்தியமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் ஒரு எதிரியான முகமது றஹ்மான் என்பவருக்கு எதிராக வழக்கைத் தாக்கல் செய்யவும் வெள்ளத்தம்பி ஹஸாக், அப்துல் காதர் முகமது, முகமது ஹியாஸ், சாரதாதேவி கணேசபிள்ளை ஆகியோருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு வழக்கை தாக்கல் செய்யவும் சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக