வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

கணவர் கண்­டு­பி­டித்­துத்­த­ரு­மாறு மனைவி மன்­றாட்டம்

மட்­டக்­க­ளப்பு - நாவற்­கு­டாவைச் சேர்ந்த பாக்­கி­ய­ராஜா விஜ­ய­குமார் (வயது 36) என்­பவர் கொழும்பு - மரு­தா­னையில் கடந்த 2ஆம் திகதி காணா­மல்போய் இது­வரை தமக்கு எவ்வித தக­வலும் கிடைக்­க­வில்லை என காணாமல் போன­வரின் மனைவி தெரிவித்துள்ளார்.


மூன்று பெண் பிள்­ளை­களின் தாயான 
வி.மங்­கை­யற்­­சியே இது தொடர்­பி­லான முறைப்­பா­டொன்­றையும் வழங்­கி­யுள்ளார் சவூ­திக்கு சார­தி­யாக தொழில் நிமித்தம் சென்ற தமது கணவர் ஜன­வரி மாதம் 14 ஆம் திகதி நாடு திரும்­பி­ய­தா­கவும் தானும் கண­வனும் கொழும்பில் மரு­தானைப் பகு­தி­யி­லுள்ள விடு­தி­யொன்றில் தங்கி இருக்கும் போது முச்சக்­கர வண்­டியில் வந்த ஒருவர் கண­வனை அழைத்துச் சென்­ற­தா­கவும் அதன்­பின்னர் தனது கணவன் தொடர்பில் எவ்­வித தக­வலும் கிடைக்­க­வில்லை என்றும் மனைவி மங்கை­யற்­க­ரசி தெரி­வித்­துள்ளார்.

கைத்­தொ­லை­பேசி அழைப்பு விடுக்­கப்­பட்டும் எவ்­வித தக­வலும் கிடைக்­காத நிலையில் மரு­தானை பொலி­ஸி­னூ­டாக காத்­தான்­குடி பொலிஸில் மறுநாள் (03.02.2016 இல்) முறைப்­பா­டொன்றைச் செய்­துள்­ள­தா­கவும் இவ்­வி­டயம் தொடர்பில் தனக்கு எது­வித தகவலும் கிடைக்­க­வில்லை எனவும் மனைவி மேலும் தெரி­வித்­துள்ளார்.

எவ்­வித வரு­மா­னங்­க­ளு­மின்றி கல்வி கற்கும் மூன்று பெண் பிள்­ளை­க­ளோடு வாழும் எனக்கு என்னுடைய கணவனை கண்டுபிடித்துத் தர அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டுமென மேலும் அவர் கண்ணீர் உருகி வேண்டுகோள் விடுத்துள்ளார்




Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate