மட்டக்களப்பின் பிரபல விளையாட்டுக்கழகங்களான கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்திற்கும் கல்லடி சிவானந்தா விளையாட்டுக்கழகத்திற்கும் இடையிலான 09வது பற்றில் ஒவ் பெற்றி (BATTIL Of THE BATTI) கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்த போட்டித்தொடர் ஆரம்பிக்கப்பட்டது.இந்தப்போட்டியில் கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் இரண்டு விக்கட்டுகளினால் வெற்றிபெற்றது.
இரண்டு போட்டிகளைக்கொண்டதாக நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கிரிக்கட் போட்டியின் ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் களத்தடுப்பினை தேர்வுசெய்து.
இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய சிவானந்த விளையாட்டுக்கழகம் 40ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் 39ஓவர்களில் 07 விக்கட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப்பெற்று தொடரை வெற்றிகொண்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக இரண்டு கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்டுவரும் இந்த கிரிக்கட் போட்டியில் முதன்முறையாக கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் இரண்டு போட்டிகளையும் வெற்றிகொண்டு இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
இறுதி பரிசளிப்பு நிகழ்வானது சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் க.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிவரும் ஏ.ஐ.ஏ.காப்புறுதி நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் லக்ஸ்மிகரன்,மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட்சபையின் தலைவர் என்.பி.ரஞ்சன்,கோட்டைமுனை விளையாட்டுக்கழக தலைவர் எஸ்.தர்மேந்திரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கிரிக்கட் போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான பரிசினை சிவானந்தா விளையாட்டுக்கழகத்தினை சேர்ந்த எம்.பிரசாத் பெற்றுக்கொண்டார்.இவர் இரண்டு போட்டிகளிலும் விளையாடி 43 ஓட்டங்களை கழகத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளதுடன் 08 விக்கட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
தொடரின் சிறந்த துடுப்பாட்டக்காரருக்கான பரிசினை கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தினை சேர்ந்த அஸ்லி சாந்த் பெற்றுக்கொண்டார்.இவர் இரண்டுபோட்டிகளிலும்33,15 என்ற ரீதியில் ஓட்டங்களைப்பெற்றிருந்தார்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக