சனி, 13 பிப்ரவரி, 2016

கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.


மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன், சட்டத்தரணியும் பழைய மாணவியுமான செல்வி என்.சிந்துபாஷினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவாமியா,சாரதா,நிவேதிகா ஆகிய மூன்று இல்லங்கள் மத்தியில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் உடற்பயிற்சி கண்காட்சிகள்,அணி நடைபோட்டிகள் என்பன நடைபெற்றன.

நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் அவாமியா இல்லம் 381 புள்ளிகளைப்பெற்று முதல் இடத்தினையும் சாரதா இல்லம் 363 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தினையும் 357 புள்ளிகளைப்பெற்று நிவேதிகா இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.



































Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624965

Translate