(ரேவநிசாந்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட் / மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலத்தில் சிரேஸ்ட சாரணருக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 08.02.2016 திங்கட்கிழமை அன்று பாடசாலை அதிபர் ந.புட்பமூர்த்தி அவர்களின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் மாவட்ட சாரணஇயக்க ஆணையாளர், உதவிக்கல்விப் பணிப்பாளர், மாவட்ட உதவி சாரண ஆணையாளர் , அதிபர்கள் ,சாரண ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், கல்விசார உத்தியோகத்தர்கள் ,சாரண மாணவர்கள், பாடசாலை மாணவ மாணவிகள் பெற்றோர்கள் முன்னிலையில் எமது பாடசாலையின் சிரேஸ்ட சாரணராக உயர்தர மாணவனான சுந்தரலிங்கம் விதுசன் அவர்களுக்கு மாவட்ட சாரண இயக்க ஆணையாளர் E..P ஆனந்தராஜா அவர்களினால் சாரனர் இயக்கத்தின் உயர் விருதான ஜனாதிபதி விருதின் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக