மட்டக்களப்பு காத்தான்குடி மீடியா போரம் தனது 16வது ஆண்டை நிறைவு மாநாட்டினை நேற்றையதினம் (6) சனிக்கிழமையன்று அதன் தலைவர் ஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைறூஸ் தலைமையில் காத்தான்குடி ஜுமைறா பெலஸில் நடத்தியிருந்தது.
ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்களின் முயற்சியினாலும் அவர் எடுத்த தொடர் நடவடிக்கையினாலும் இந்த போரம் கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
காத்தான்குடியிலுள்ள பல்வேறு ஊடகங்களிலும் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய செய்தியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக ஊடகவியலாளர்களின் நலன் கருதி காத்தான்குடி மீடியா போரம் உருவாக்கப்பட்டது. ஊடகவியலாளர்களின் நலன் மற்றும் ஐக்கியம் ஒற்றுமை என்பவற்றை இலக்காக கொண்டு இந்த அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
காத்தான்குடி மீடியா போரத்திலுள்ள மேற்படி உறுப்பினர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களாகவும், பல் வேறு அச்சு இலத்திரணியல் ஊடகங்களின் பிராந்திய செய்தியாளர்களாகவும், குறுஞ்செய்திச்சேவை ஊடகவியலாளர்களாகவும், பிராந்திய செய்தி இணையதளங்களின் ஆசிரியர்களாகவும் அதன் செய்தியாளர்களாகவுமுள்ளனர்.
மேற்படி காத்தான்குடி மீடியா போரம் தனித்துவ மிக்க ஒரு அமைப்பாக காத்தான்குடியில் செயற்பட்டு வருகின்றது.
போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் பிரதம விருந்தினராக மீள் குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கௌரவ விரந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மற்றும் விசேட விருந்தினராக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.ஜி.எம்.தௌபீக், காத்தான்குடி காழிநீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் பலாஹி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தலைவர் றஊப் ஏ மஜீட் ஆகியோரும் காத்தான்குடியிலுள்ள முக்கியஸ்தர்கள் உலமாக்கள் பிரமுகர்களும் இதில் கொண்டனர்.
இதன்போது 16வது ஆண்டை நிறைவினை முன்னிட்டு நினைவு மலர் ஒன்று வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் காத்தான்குடி மீடியா போரத்திலுள்ள உறுப்பினர்களின் பிள்ளைகளில் கடந்த ஆண்டுகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகள் பாராட்டப்பட்டதுடன் போரத்தின் நிருவாக உறுப்பினர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பதடத்துடன், ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக