இன்றைய நவீன கால கட்டத்தில் தகவல் தொடர்பாடல் கற்கையும் ஆங்கில கல்வியும் கல்வி கற்கும் அனைத்து தரப்பினருக்கும் மிக முக்கியமான தேவைப்பாடக உள்ளது என கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் ரீ.ஜெயசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலையின் கலைகலாசார பீடத்திற்குரிய புதிய தகவல் தொடர்பாடல் கூடத்தை இன்று (10) வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு பல்கலையின் கலைகலாசார பீடத்திற்குரிய புதிய தகவல் தொடர்பாடல் கூடத்தை இன்று (10) வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பல்கலையின் கலைகலாசார பீடாதிபதி கலாநிதி கே.ராஜேந்திரம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் இணைப்பாளர் எம்.ரி.எம. றீஸ்வி மற்றும் துறைத்தலைவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு உபவேந்தர்; கருத்து தெரிவிக்கையில்;
தற்பொழுது மிக முக்கியமான கால கட்டத்தில் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில் தகவல் தொடர்பாடல் என்பது ஒவ்வொருவரின் அன்றாட கல்வி நடவடிக்கையிலும் தாக்கம் செலுத்துகின்றது.
தனியாக தகவல் தொடர்பாடல் கற்கையை உள்வாங்குவது மட்டுமல்ல எல்லாப் பாடத்துறையிலும் உள்வாங்குவது இன்றைய கால கட்டத்தில் பொருத்தப்பாடாகவும் தேவையாகவும் உள்ளது.
தகவல் தொடர்பாடல் கற்கையை மாத்திரம் கற்றால் ஓரிரு மாதங்களில் மறக்கவேண்டிய நிலை உருவாகின்றது, அதனால் ஏனைய பாடவிதானங்களில் உள்ளடக்கியதாக அமையுமாக இருந்தால் கற்கைக்கு பொருத்தமானதாக அமையும்.
தகவல் தொழிநுட்பத்தை அன்றாடம் பாவிக்கின்ற கையடக் தொலைபேசியைப் போன்று பாவிப்பதற்குரிய தேர்ச்சியும் துணிவும் வரவேண்டும்.
அந்த விதத்தில் தொழிநுட்பம் அதிகமான பாட விதானங்களில் உள்ள வாங்கப்பட்டமையானது மிகச் சிறந்ததொன்றாகும் என தெரிவித்தார்.
குறித்த தகவல் தொடர்பாடல் கூடமானது கடந்த 2013ம் ஆண்டு கலைகலாசார பீட தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப செயத்திட்டத்தின் ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்ட நிலையில் 31.70 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.குறித்த தகவல் தொடர்பால் கூடத்தினால் கலைகலாசார பீடத்தில் கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களின் மேலதிக திறன் விருத்தியை அதிகரித்துக் கொள்ளமுடிமெ தெரிவித்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக