சித்தாண்டியில் திறந்து வைத்துள்ள விவசாய விலங்கு உற்பத்தி விற்பனை நிலையமானது சிறு விவசாய உற்பத்தியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடனும் விவசாயிகள் மற்றும் விலங்கு பண்ணையாளர்களின் வேண்டுகோளுக்கினங்க குறித்த விவசாய விலங்கு உற்பத்தி விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என விவசாய போதனாசிரியர் செ.சுதாகரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் (10) வியாழக்கிமை மட்டக்களப்பு வடக்கு விவசாய உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் விவசாய விலங்கு உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையமானது ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதரினால் திறந்து வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய விவசாய போதனாசிரியர் செ.சுதாகரன் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்;
குறித்த நிலையத்தினூடாக தரமான உள்ளீடுகளை விநியோகிப்பதுடன் விவசாயிகள் மற்றும் விலங்கு பண்ணையர்களுக்கு நியாயமான விலைக்கு பொருட்களை வழங்குவதுடன் நவீன தொழிநுட்பத்தை விவசாயிகளுக்கு வழங்கி குறிப்பிட்ட நேரத்துக்குள் விசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய வழிவகுக்கும்.
குறித்த சம்மேளனத்தின் சோலை எனும் நிலையத்தினூடாக விவசாயிகளிடம் இருந்து கிடைக்கப் பெறும் நஞ்சு அற்ற விவசாய உற்பத்தி பொருட்களை மொத்தமாகப் பெற்று உரிய சந்தை வாய்ப்புக்களைப் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வுக்கு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், விவசாயத் திணைக்களத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர் வி.லிங்கேஸ்வரராஜா, விவசாய போதனாசிரியர் எஸ்.சுரேஸ்குமார், செ.சுதாகரன் மற்றும் திரு.மதி.ரமேஸ், வடக்கு விவசாய சம்மேளனத்தின் தலைவர் சி.விமேசுரேன், கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் இ.கஜேந்திரன் மற்றும் விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது பிரதேச செயலாளரினால் வடக்கு விவசாய உற்பத்தியாளர் சம்மேளனத்துக்குரிய வாகனமும் கையளிக்கப்பட்டன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக