புதன், 16 நவம்பர், 2016

அரச அலுவலர்களையும் சிறுபான்மை சமூகங்களையும் இழிவுபடுத்தும் தேரருக்கெதிராக கண்டன கவனயீர்ப்பு போராட்டம்

 லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள்  கருப்பு பட்டியணிந்து  கண்டன கவனயீர்ப்பு  போராட்டத்த்தினை இன்று மேற்கொண்டனர்


சிறுபான்மை இன அரச அலுவலர்களையும் சிறுபான்மை சமூகங்களையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கெதிராக  மட்டக்களப்பு மாவட்ட  14 பிரதேச செயலகங்களின்  கிராம சேவை பிரிவுகளில் பணிபுரியும்  கிராம சேவை உத்தியோகத்தர்கள்  கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு போராட்டத்தினை இன்று மேற்கொண்டனர் .

இதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள்  இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பாக கருப்பு பட்டியணிந்து கண்டன கவனயீர்ப்பு  போராட்டத்தினை மேற்கொண்டனர் .


இடம்பெற்ற இந்த கண்டன கவனயீர்ப்பு  போராட்டத்தில்  அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன் தமது கண்டனத்தை  தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது


    
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624965

Translate