வியாழன், 26 நவம்பர், 2015

உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்கும் பயிற்சிப் பட்டறை

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்கும் பயிற்சி பட்டறை இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்கில், நடத்தப்பட்ட இந்த மாகாணமட்ட பயிற்சி நெறி மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இன்று ஆரம்பமானது.
இரு தினங்களுக்கு இடம்பெறவுள்ள இந்தப்பயிற்சி நெறியில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி நிருவாகத்தில் கடமையாற்றும் சுமார் 25 தொழினுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம் உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான மாகாண மட்ட பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தார்.
உயிர்வாயு தொழினுட்பம் பற்றி விழிப்புணர்வூட்டும் தேசிய, மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு அங்கமாக இந்தப் பயிற்சி இடம்பெறுகிறமைக் குறிப்பிடத்தக்கது.
DSC00140 DSC00175
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate