(லியோன்)
மட்டக்களப்பு பொலிசாரினால் கஞ்சாவுடன்
கைதுசெய்யப்பட்ட காத்தான்குடி பகுதியை சேர்ந்த நபர் பிணையில் விடுதலை .
மட்டக்களப்பு பொலிஸ்
பிரிவுக்குற்பட்ட பகுதியில் மட்டக்களப்பு
பொலிசாரினால் காத்தான்குடி பகுதியை
சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சாவுடன்
கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் (04) வெள்ளிக்கிழமை
ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் .
நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு
விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டதன்
காரணமாக குற்றவாளிக்கு எதிராக 20,000ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய நீதவான் நீதிமன்ற நீதிபதி
மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார் .
குறித்த குற்றவாளியால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குற்றவாளி எதிர்
வரும் 29.11.2016 நீதிமன்றில் ஆஜராகுமாறும் ,வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய கஞ்சா விற்பனை முகவரை
நீதி மன்றில் ஆஜர்படுத்த பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதுடன் , கஞ்சா விற்பனையில் ஈடுபடும் பெரும்புள்ளிகளை
விசாரணைகள் மூலம் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் .
0 facebook-blogger:
கருத்துரையிடுக