வியாழன், 10 நவம்பர், 2016

வந்தாறுமூலையில் பக்திபூர்வமாக இடம்பெறவுள்ள தாமோதர மாத நகர் சங்கீர்த்தனப் பெருவிழா

சிறப்புமிகு கார்த்திகை மாதமான தாமோதர மாதத்தை முன்னிட்டு வந்தாறுமூலை மஹா விஷ்ணு ஆலய நிர்வாகம்இவந்தாறுமூலை இந்து இளைஞர் மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினரால் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் தாமோதர மாத நகர் சங்கீர்த்தனப் பெருவிழா  கிழக்கின் திருப்பதியாக விளங்கும் வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் 11.11.2016 வெள்ளிக்கிழமை பி.ப.04.00மணிக்கு இடம்பெறவுள்ளது.


அந்தவகையில் முதல் நிகழ்வாக நகர் சங்கீர்த்தனம் மகா விஷ்ணு ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு வீசி வீதி வழியாக சென்று பெரியதம்பிரான் வீதி ஊடாக களுவன்கேணி வீதிஇபிரதான வீதியை அடைந்து ஆலையடி வீதிஇஉப்போடை வீதி ஊடாக அம்பலத்தடியை அடைந்து அக்கிருந்து பிரதான வீதி ஊடாக வேக்கவுஸ் வீதி,கிருஷ்ணன் கோவில் வீதி ஊடாக ஆலயத்தை சென்றடையவுள்ளது.

அதனை தொடர்ந்து மஹா விஷ்ணு ஆலய கண்ணன் அரங்கில் பகவத்கீதை சொற்பொழிவு இதாமோதராஷ்டக ஆராத்தி பூஜை.பஜனை மற்றும் பிரசாதம் என்பன இடம்பெறவுள்ளது.





Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624955

Translate