(லியோன்)
இலங்கை விமானப்படை
அணிக்கும் இலங்கை பொலிஸ் அணிக்கும் இடையிலான ஹொக்கி கண்காட்சி போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது .
இலங்கை விமானப்படை அணிக்கும் இலங்கை பொலிஸ்
அணிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்ற ஹொக்கி போட்டி 03.11.2016
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹொக்கி விளையாட்டினை அறிமுகப்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹொக்கி
விளையாட்டு சங்கத்தினை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட ஹொக்கி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு
கல்வி வலயத்தின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட ஹொக்கி சங்கத்தின் தலைவர் வை . கோபிநாத்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே .பி . கீர்த்திரத்ன , சிறப்பு விருந்தினர்களாக விமானப்படையின் கட்டளை அதிகாரி ஹெட்டிஹாரச்சி
,மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க தலைவரும் , மட்டக்களப்பு மாநகர
ஆணையாளருமான எம் .உதயகுமார் , மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய தேர்தல் அத்தியட்சகர்
சசீலன் , மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் , உடல்கல்வி
உதவிக்கல்விப் பணிப்பாளர் வி .லவக்குமார்
மற்றும் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,
விமானப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வின் போது மாணவர்களின் பல்வேறு கலாசார அணிவகுப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது .
இதன் போது ஹொக்கி விளையாட்டினை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறிமுகம்
செய்யும் வகையில் இலங்கை விமானப்படை ஹொக்கி அணிக்கும் இலங்கை பொலிஸ் ஹொக்கி அணிக்கும்
இடையில் கண்காட்சி ஹொக்கி போட்டி நடைபெற்றது .
இந்த போட்டியில்
இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடி இரண்டு கோள்கள் வீதம் பெற்றுக்கொண்டதுடன் இப்போட்டி
சமநிலையில் நிறைவுற்றது .இந்நிகழ்வின் போது
மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது .
0 facebook-blogger:
கருத்துரையிடுக