நல்லாட்சி அரசாங்கத்தின் மட்டக்களப்பு பொலிஸாரை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தள்ளார். மட்டக்களப்பு களுதாவளையில் இடம்பெற்ற காணி மறுசீரமைப்பு பிரதி ஆணையாளர் மீதான துப்பாக்கி பிரயோகத்தினை கண்டித்து இன்று களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலையடியில் பட்டிருப்பு தொகுதி தமிழ் சமூகத்தினால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்ட போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மட்டக்களப்பு பொலிஸாரை நான் வன்மையாக
கண்டிக்கின்றேன். காரணம் மண்டூரில் படுகொலை செய்யப்பட்ட சமூகசேவை உத்தியோகஸ்தரான மதிதயனின் படுகொலையை பொலிஸார் மூடி மறைக்கின்றனர். நாங்கள் பல மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களிலும் கடிதங்கள் மூலம் பல தடவைகள் முன்வைத்திருந்த போதும் இதுவரைக்கும் பொலிஸார் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தப்படவுமில்லை, குற்றாவளிகள் வெளிக்கொணரப்படவுமில்லை. இவ்வாறான செயற்பாடுகள் நல்லாட்சிக்கான செயற்பாடுகள் அல்ல கொடுங்கோல் ஆட்சியாக நான் கருதுகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்.ஆர்.சி காணிகள் 47000 ஏக்கர் உள்ளன. இவற்றில் 30000ஏக்கர் காணிகள் இனமுறுகலுக்குள்ளான செயற்பாடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளன. இந்த எல்.ஆர்.சி காணிக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்தின் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்பில்லை. மத்திய அரசாங்கத்தின் காணி ஆணையாளர் மற்றும் உதவி காணி ஆணையாளர் ஊடாகவே முன்னெடுத்து வருகின்றது. எல்.ஆர்.சி காணிகள் தொடர்பாக கடந்த காலங்களில் முழுமையாக தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் செங்கலடி பிரதேச செயல பிரிவில் காணப்படும் எல்.ஆர்.சி காணிகள் ஒருசில சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்த சிலர் அத்துமீறி அக்காணிகளை பிடிக்கின்றனர். இதனை பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் நடவடிக்கை எடுத்த போதும் அது முரண்பாடுகளை தோற்றுவித்தது. அது சிலவேளைகளில் இந்த காணி பிரதி ஆணையாளரை தாக்கியிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம். இது தொடர்பாக தமிழ் N;தசிய கூட்டமைப்பினர் கொழும்பில் டி.ஐ.ஜிடம் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர். தன மட்டக்களப்பு பொலிஸார் துரித நடவடிக்கை மூலம் குற்றவாளியை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அவ்வாறு இதற்கு தகந்த நடவடிக்கை எடுக்காத சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பில் பல அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தாக்குதலுக்குள்ளவதுடன், படுகொலையும் செய்யப்படுவார்கள். இதற்கு நல்லாட்சி அரசே பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக