திங்கள், 27 பிப்ரவரி, 2017

மகிழூரில் பிரதேசசெயலாளர் கலாநிதி மூ.கோபலரெத்தினத்திற்குசேவைநலன் பாராட்டுவிழா.

மண்முனைதென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் 2014ம் ஆண்டு பிரதேச செயலாளராக பதிவியேற்று இதுவரைகாலம் வரை மிகவும் அர்ப்பணிப்பான சேவையாற்றி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பின்தங்கிய கிராமங்களின் உட்கட்டமைப்புவசதிகளின் அபிவிருத்தி மற்றும் கல்வி,வழவாதார அபிவிருத்திகளிற்காய்பெரும் சேவையாற்றி நிதியமைச்சினுள் மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் இவ் விழாவில் கௌரவிக்கப்பட்டிருந்தார்.






மகிழூர் மேற்குகிராமஅபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் க.கணேசபிள்ளை; தலைமையில் நடைபெற்றசேவைநலன் பாராட்டுநிகழ்வில் மகிழூர் பெரும் பிரதேசத்தினைச் சேர்ந்தகிராமஅபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்கள், ஆலய பரிபாலனசபைத் தலைவர்கள், இளைஞர் பாராளுமன்றஉறுப்பினர்,மகிழூர் மேற்கு இளைஞர் கழகஉறுப்பினர்கள்,மாதர்சங்கஉறுப்பினர்கள் மற்றும் பலபொதுஅமைப்புக்களினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்துசிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் உரையாற்றியபலராலும் மகிழூர் பெரும்பிரதேசத்திற்குகலாநிதி மூ.கோபாலரெத்தினத்தினம் அவர்களால்வழங்கப்பட்டசேவைகள் நினைவுகூரப்பட்டுபாராட்டப்பட்டதுடன் ,நன்றிகளையும் தெரிவித்திருந்தனர். அத்துடன் பிரதேசசெயலாளர் கிராமபிரமுகர்களால் பொன்னாடைபோர்த்திகௌரவிக்கப்பட்டதுடன் ,வாழ்த்துமடலும் வழங்கிகௌரவிக்கப்பட்டிருந்தார்.


















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624964

Translate