இலங்கை திருநாட்டின் 69வது சுதந்திர தின நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (04) பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் போரதீவுபற்று கலாசார மத்திய நிலையத்தில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமானது.
இதனைத்தொடர்ந்து இரத்தான நிகழ்வும், பிரதேச
செயலக வளாகத்தினுள் சிரமதானப்பணியும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச வைத்திய பொறுப்பதிகாரி வே.குணராஜசேகரம், போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் அ.ஆதித்தன் மற்றும் வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பாலையடிவட்டை இராணுமுகாம் இராணுவ வீரர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் பாதணி மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக