திங்கள், 13 பிப்ரவரி, 2017

திறமையுடன் விடாமுயற்சி இணையும் போதே இமாலய வெற்றியினைப்படைக்க முடிகின்றது. உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத்


தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட  மொழிப்பயிற்சி வகுப்புகளிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை(06.02.2016) அன்று மட்டக்களப்பு மண்முனை தெற்கு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் மற்றும் மட்டக்களப்பு மண்முனை தெற்கு பிரதேச செயலாளர் கு.குணநாதன் கலந்து சிறப்பித்திருந்தனர். 12 நாள் நடைபெற்ற ஆங்கில மொழிப்பயிற்சியினை பூர்த்தி செய்திருந்த 64 இளைஞர், யுவதிகளுக்கு நிறுவனத்தினால் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. 

இன்றைய காலகட்டத்தில் மொழி மிக முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது. மொழி பல சாதனைகளைப் படைப்பதற்கான ஆயுதமாக திகழ்கின்றது. அந்தவகையில் எமது அமைச்சின் கீழ் பல மொழிப்பயிற்சி வகுப்புக்கள் நாடுபூராகவும் நடைபெற்றுவருகின்றது. 

அந்தவகையில் எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் ஆங்கில மற்றும் சிங்கள மொழிப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றிருக்கின்றது. மொழிப்பயிற்சி வகுப்புகளிற்கான பொறுப்பான அதிகாரியாக நான் விழங்கவதன் காரணமாக இயன்றவரை எமது பிரதேசங்களில் வகுப்புக்களை நாடாத்துவதற்கு என்னால் இயன்ற முயற்சிகளை செய்து வருகின்றேன். அந்த வகையில் இன்று காலை பட்டிப்பளையில் சிங்கள மொழிப்பயிற்சியினை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளிற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. எம்மால் நிகழ்த்தப்பட்ட இவ் பயிற்சிநெறியில் பெற்ற அறிவினை அடிப்படையாக கொண்டு இணைப்பு மொழியாக விழங்கும் ஆங்கில மொழியில் சிறந்த விருத்தியினை பெற தொடர்ந்து முயலுங்கள். திறமையுடன் விடாமுயற்சி இணையும் போதே இமாலய வெற்றியினைப்படைக்க முடிகின்றது. என தனது உரையில் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்திருந்தார்.








Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate