மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்றுக் கோட்ட அதிபர்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் இ.சாணக்கியன் அவர்களால் RAINCOAT இன்று(06) வழங்கி வைக்கப்பட்டது.
போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி
பூ.பாலச்சந்திரன் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் போரதீவுப்பற்று கோட்டத்தில் உள்ள அனைத்து அதிபர்களுக்கும் அமைப்பின் பணிப்பாளர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய கோட்டக்கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் 'மக்களின் தேவையறிந்து அனைத்தையும் செய்துவரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பானது எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயற்பட்டு மக்கள் மாணவர்களின் தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டும். அதே போன்று எமது கோட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மீது அக்கறை செலுத்துவதாகவும் அதே போன்று கல்விக்காக பாரிய நிதியினை ஒதுக்கி மாணவர்களின் எதிர்கால கல்வியில் அக்கறை கொண்டு செயற்படுவது எமது பிரதெசத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் தெரிவித்தார.
0 facebook-blogger:
கருத்துரையிடுக