சனி, 25 பிப்ரவரி, 2017

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் வெகுசிறப்பாக இடம் பெற்ற சிவராத்திரி

மஹா சிவராத்திரி விரத சிறப்பு                                         நிகழ்வுகள் தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று   2017.02.24(வெள்ளிக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது ஆலய பரிபாலன சபையின் தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.




அந்தவகையில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில்இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகி 'பால புஸ்கரணி' தீர்த்தக்கங்கையில் தீர்த்தநீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் ண்ணும் சிறப்பு நிகழ்வு 06.30 மணியளவில் ஆரம்பமாகி விசேட பூஜை தொடர்ந்து இவ் தீர்த்த நீர் கொண்டுவரும் நிகழ்வு காலை முதல் இன்று(25.02.2017) சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.இதன் பொது பல அடியார் கலந்து கொண்டு அபிஷேகம் பண்ணியமை குறிப்பிடத்தக்க விடயம் 

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் சிவராத்திரி நிகழ்வும் ஆலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

சிவராத்திரி விரத்தினை சிறப்பிக்கும் வகையில் இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களிடையே பல தரப்பட்ட போட்டிகளும் கலை நிகழ்வுகளும் இடம் பெறதுடன் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்க்கு பரிசுகளும் சான்றிதழ்களும்வழங்கப்பட்டதுடன் அடியார்களிடையே இந்து சமய இதிகாச,புரணங்கிடையே வினாக்கள் வினவப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பசு வழங்கப்பட்டன.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624947

Translate