மட்டக்களப்பு மாவட்டத்தில்
தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான இரண்டு குளங்களின்
வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தினால்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக உன்னிச்சை
குளத்தில் 25.4
அங்குலம்
வரை நீர் உயர்வடைந்துள்ளமையினால் குளத்தின் பிரதான வான்கதவுகள் மூன்றும் 1 அடி வரை
திறக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் மற்றுமொரு பிரதான குழமாகிய உறுகாமக்
குளத்தின் நீர்மட்டம் 14.7 அங்குலம் வரை உயர்வடைந்துள்ளமையினால் இக்குளத்தின் பிரதான
வான்கதவுகள் இரண்டும் 2 அடிவரை
திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தொடர்ச்சியாக பெய்துவரும்
அடை மழை காரணமாக மாவட்ட மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதக
தெரியவருகின்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக