ஞாயிறு, 6 மார்ச், 2016

மட்டக்களப்பில் வீடு உடைத்து பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியில் உள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

பூம்புகார் ஐந்தாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றே உடைக்கப்பட்டு இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 80பவுண் தங்க நகைகள் ஒரு இலட்சம் ரூபா பணம் காஸ் சிலிண்டர் ஒன்று என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு சென்று இன்று ஞாயி;றுக்கிழமை அதிகாலை வீடு திரும்பியுள்ள நிலையில் வீடு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624942

Translate