(ரேவநிசாந்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் முனை தென்எருவில்பற்று செயலகப் பிரிவுக்குட்பட்ட மகிழூர்முனை110வீ கிராமத்தி ல் இளைஞர்கழக உறுப்பினர்களை வலுவூட்டும் நிகழ்வு சக்தி இளைஞர்கழக தலைவர் சுந்தரலிங்கம் விதுசன் தலைமையில் 13.03.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை மகிழூர்முனை பல்தேவைக்கட்டிடத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் சக்தி இளைஞர் கழகத்தின் அழைப்பையேற்று வருகை தந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினருமான கெளரவ .கோ.கருணாகரம் அவர்களும், மண்டபத்தடி பிள்ளையார் ஆலய பரிபாலன சபை உபதலைவர் மா.சுந்தரலிங்கம்அவர்களும், விளையாட்டு கழக தலைவர் த.சபியதாஸ் ஆகியோரும் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன் நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உபதலைவர் உரையாற்றும் போது கடந்தகாலங்களில் சக்தி இளைஞர்கழக உறுப்பினர்களின் பங்களிப்பு இக்கிராமத்தின் வளர்ச்சியில் மிகவும் உறுதுணையாக இருந்தது. ஆனால் அவற்றில் தற்போது பின்னடைவு காணப்படுகிறது.அதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சரி செய்து கொள்ளவேண்டும்.எமது கிராமத்தின் வளர்ச்சியில் கடந்தவருடங்களை விட இவ்வருடத்தில் சக்தி சக்தி இளைஞர்கழகத்தின் பங்களிப்பு உன்னதமாக திகழ வேண்டும். அதற்கு தேவையான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றினைந்து மேற்கொள்ளவேண்டும், என கேட்டுக்கொண்டார்.
விளையாட்டு கழக தலைவர் தமது உரையிலே எமது கழகத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் கடந்தகால செயற்பாடுகளில் எமது இளைஞர் கழகம் சிறந்து விளங்கியது. குறிப்பாக மாவட்ட இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களாக எமது சங்க உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். அதே போன்று விளையாட்டு,கலை ,கலாசார நிகழ்வுகளில் சிறந்த திறமையினை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தற்போது அவற்றில் பின்னடைவினை சந்தித்துள்ளோம். இது நிரந்தரமாகிவிடக்கூடாது, மீண்டும் நாம் இளைஞர் கழக நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டவேண்டும், எனகேட்டுக்கொண்டார் இதனைத் தொடர்ந்து முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினருமான கெளரவ .கோ.கருணாகரம் அவர்கள் உரையாற்றும் போது இன்றைய இளைஞர்,யுவதிகளே நாட்டின் நாளைய தலைவர்கள் இவர்களை உருவாக்குவதில் இளைஞர் கழகங்களின் பங்களிப்பு அளப்பெரியது.இளைஞர் கழகங்கள் கழக உறுப்பினர்களின் தேவைகளோடு நின்றுவிடக்கூடாது, சமுகத்தின் தேவைகளை உணர்ந்து தங்களினால் செய்யக் கூடிய செயல்களை செய்ய முன்வரவேண்டும். குறிப்பாக இன்று கிராமப்புறங்களில் பாடசாலை இடைவிலகல் மாணவர்களின் தொகை அதிகரித்துவருகிறது, இவை தொடர்பாக கவனம் செலுத்தி மாணவர்களின் இடைவிலகலை தடுத்து நிறுத்தவேண்டும்.அது மட்டுமின்றி சமுகத்தில் பயன்தரக்கூடிய திட்டங்களை செயற்படுத்தலாம்.இந்த வகையில் டெங்குஒழிப்பு,அதிகரித்து வரும் மதுபாவனை,புகைப்பிடித்தலை குறைப்பதக்கான விழிப்புணர்வு, அதிகரித்து வரும் தற்கொலைகளை குறைப்பதக்கான வழிமுறைகளை என்பவற்றை கிராமக்கள் மத்தியில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். மேலும் வறிய மாணவர்களுக்கான பிரேத்தியேக வகுப்புக்களை நடாத்துதல்,பொதுஇடங்களில் சிரமதான பணிகளை மேற்கொள்ளுதல் போன்றன உங்களது கிராமத்தின் வளர்சிக்கு உறுதுணையாக அமையும்,என கூறினார் அதனைத்தொடர்ந்து இளைஞர் கழக தலைவர் பேசும் போது எமது இளைஞர் கழகமானது இவ்வருடத்தில் நிச்சயமாக பல வெற்றிகளை எட்டும் எனவும் ஆனால் கழகத்தின் பௌதீக வளங்கள் பாயன்பாட்டுக்கு உதவாதவகையில் தற்போது இருக்கின்றது. புதிய பௌதீகவளங்களை கிழக்குமகாண சபை உறுப்பினராகிய கோ. கருணாகரம் ஐயா பெற்றுத்தரவேண்டும்,என கேட்டுக்கொண்டார் அப்போது கிழக்குமகாண சபை உறுப்பினராகிய கோ. கருணாகரம் ஐயா அவர்கள் இவ் சக்தி இளைஞர் கழகமானது மீண்டும் சக்தி பெற தம்மால் முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்வதாக உறுதியளித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக