அதிபரும் எழுத்தாளருமான க.பிரபாகரனின் 'மானிட நேயன் ஆ.மு.சி.வேலழகன் ஆய்வு நூல்' மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மண்டபத்தில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா தலைமையில் 06.03.2016ம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அவர்களும், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கௌரவ மா.உதயகுமாரும், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் விஷேட வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி கு.தெ.சுந்தரரேசன் அவர்களும் தொல்லியல் ஆய்வாளர் செல்வி க.தங்கேஸ்வரி அவர்களும் சைவப்புலவர் வி.றஞ்சிதமூர்த்தி மற்றும் தேசபந்து மு.செல்வராசா அவர்களும் கலந்து கொண்டனர். இந்நூலுக்கான நயவுரையினை ஓய்வுநிலை அதிபர் வே.தவராசா அவர்களும் வழங்கி வைத்தார்.
MR.K.PIRAPAKARAN. |
0 facebook-blogger:
கருத்துரையிடுக