அரசியல் என்றால் பலர் சாக்கடை என கருதுகிறார்கள்.
அரசியல்வாதிகள் செய்கின்ற பிழைகள் காரணமாக மக்கள் வித்தியாசமான
முறையில் நினைக்கிறார்கள். இளைஞர்கள் அரசியலுக்குவர வேண்டும்.
மக்களுக்கு ஊழலற்ற சேவையை ஆற்றக்கூடியவர்களாக அரசியல்
கலாசாரத்தை அவர்கள் உருவாக்க வேண்டும். எதிர்வருங்காலத்திலே எமது
பிரதேசங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறவுள் ளன. இந்த
தேர்தலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவ ட்ட பாராளுமன்ற
உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.
இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும் தொழிற்பயிற்சி
நிலையத்தில் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்
வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், - எமது பிரதேசங்களில் படித்தவர்கள் பட் டம்
பெற்றவர்கள் அதிகரித்ததன் காரணமாக வேலைக்காக வீதியில் இறங்கி
போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர் யுவதிகள் தொழில் கல்வியை பயின்று
சுயதொழில்களை மேற்கொள்வதன் மூலம் மாத்திரமே தமது வாழ்வாதாரத்தை
உயர்த்திக்கொள்ள வேண்டிய நிலை தற்போது உருவாகியுள் ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் பல
தொழிற்சாலைகள் காணப்பட்டதன் காரணமாக சாதாரணமாக
படித்திருந்தாலும் தொழில்களைப் பெற்றுக்கொள் ளக்கூடிய நிலை
காணப்பட்டது. யுத்த சூழலின்போது பல தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன.
சில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இளைஞர்கள் அரசியல் ரீதியாக
தங்களது ஆளுமையை வளர்த்துக்கொள்வத ற்கு தற்போது இளைஞர்
பாராளுமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பங்களைச்
சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
அரசியல் என்றால் பலர் சாக்கடை என கருதுகிறார்கள்.
அரசியல்வாதிகள் செய்கின்ற பிழைகள் காரணமாக மக்கள் வித்தியாசமான
முறையில் நினைக்கிறார்கள். இளைஞர்கள் அரசியலுக்குவந்து
மக்களுக்கு ஊழலற்ற சேவையை ஆற்றக்கூடியவர்களாக அரசியல்
கலாசாரத்தை உருவாக்க வேண்டும். எதிர்வருங்காலத்திலே எமது
பிரதேசங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த
தேர்தலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இளைஞர்கள்
இளைஞர் அணிகளில் இணைந்து தமது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்த
வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை தேர்தல் காலங்களில்
இளைஞர் கழகங்கள் எங்களுக்கு ஒத்துழைப்புத் தருவது மிகவும் குறைவாகவே
காணப்படுகிறது. தேர்தல் வரும்போது அவர்கள் சார்பானவர்களை போட்டியிடுவதற்கு
பட்டியலை மாத்திரம் கொண்டுவருவார்கள். இளைஞர்கள் எங்கள் கட்சியின் இளைஞர்
அணியில் இணைந்து செயற்பட வேண்டும் அதன் மூலம் தேர்தல் களில் வேட்பாளர்களாக
நிறுத்தப்படக் கூடிய உரிமையை நீங்கள் பெறமுடியும் என் றார்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக