சனி, 5 மார்ச், 2016

ஊழ­லற்ற கலா­சா­ரத்தை உரு­வாக்க இளை­ஞர்கள் அர­சி­ய­லுக்கு வர­வேண்டும் - யோகேஸ்­வரன் அழைப்பு

அர­சியல் என்றால் பலர் சாக்­கடை என கரு­து­கி­றார்கள். அர­சி­யல்­வா­திகள் செய்­கின்ற பிழைகள் கார­ண­மாக மக்கள் வித்­தி­யா­ச­மான முறையில் நினைக்­கி­றார்கள். இளை­ஞர்கள் அர­சி­ய­லுக்­கு­வர வேண்டும். மக்­க­ளுக்கு ஊழ­லற்ற சேவையை ஆற்­றக்­கூ­டி­ய­வர்­க­ளாக அர­சியல் கலா­சா­ரத்தை அவர்கள் உரு­வாக்க வேண்டும். எதிர்­வ­ருங்­கா­லத்­திலே எமது பிர­தே­சங்­களில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்கள் நடை­பெ­ற­வுள் ­ளன. இந்த தேர்­தலில் இளை­ஞர்­க­ளுக்கு முக்­கி­யத்துவம் கொடுக்­கப்­படும் என தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவ ட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் அழைப்பு விடுத்தார்.
இளைஞர் சேவைகள் மன்­றத்­தினால் மட்­டக்­க­ளப்பு புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்தில் இயங்­கி­வரும் தொழிற்­ப­யிற்சி நிலை­யத்தில் பயிற்­சி­களைப் பூர்த்தி செய்த மாண­வர்­க­ளுக்கு சான்­றிதழ் வழங்கும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.
 
அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், - எமது பிர­தே­சங்­களில் படித்­த­வர்கள் பட் டம் பெற்­ற­வர்கள் அதி­க­ரித்­ததன் கார­ண­மாக வேலைக்­காக வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இளைஞர் யுவ­திகள் தொழில் கல்­வியை பயின்று சுய­தொ­ழில்­களை மேற்­கொள்­வதன் மூலம் மாத்­தி­ரமே தமது வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­திக்­கொள்ள வேண்­டிய நிலை தற்­போது உரு­வா­கி­யுள்­ ளது.
 
வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் கடந்த காலங்­களில் பல தொழிற்­சா­லைகள் காணப்­பட்­டதன் கார­ண­மாக சாதா­ர­ண­மாக படித்­தி­ருந்­தாலும் தொழில்­களைப் பெற்­றுக்­கொள் ­ளக்­கூ­டிய நிலை காணப்­பட்­டது. யுத்த சூழ­லின்­போது பல தொழிற்­சா­லைகள் அழிக்­கப்­பட்­டன. சில தொழிற்­சா­லைகள் மூட­ப்­பட்­டுள்ளன. இளை­ஞர்கள் அர­சியல் ரீதி­யாக தங்­க­ளது ஆளு­மையை வளர்த்­துக்­கொள்­வ­த ற்கு தற்­போது இளைஞர் பாரா­ளு­மன்றம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சந்­தர்ப்­பங்­களைச் சரி­யான முறையில் பயன்­ப­டுத்த வேண்டும்.
 
அர­சியல் என்றால் பலர் சாக்­கடை என கரு­து­கி­றார்கள். அர­சி­யல்­வா­திகள் செய்­கின்ற பிழைகள் கார­ண­மாக மக்கள் வித்­தி­யா­ச­மான முறையில் நினைக்­கி­றார்கள். இளை­ஞர்கள் அர­சி­ய­லுக்­கு­வந்து மக்­க­ளுக்கு ஊழ­லற்ற சேவையை ஆற்­றக்­கூ­டி­ய­வர்­க­ளாக அர­சியல் கலா­சா­ரத்தை உரு­வாக்க வேண்டும். எதிர்­வ­ருங்­கா­லத்­திலே எமது பிர­தே­சங்­களில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்கள் நடை­பெ­ற­வுள்­ளன. இந்த தேர்­தலில் இளை­ஞர்­க­ளுக்கு முக்­கி­யத்துவம் கொடுக்­கப்­படும் இளை­ஞர்கள் இளைஞர் அணி­களில் இணைந்து தமது அர­சியல் பிர­வே­சத்தை உறு­திப்­ப­டுத்த வேண்டும். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை பொறுத்­த­வரை தேர்தல் காலங்­களில் இளைஞர் கழ­கங்கள் எங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்புத் தருவது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. தேர்தல் வரும்போது அவர்கள் சார்பானவர்களை போட்டியிடுவதற்கு பட்டியலை மாத்திரம் கொண்டுவருவார்கள். இளைஞர்கள் எங்கள் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து செயற்பட வேண்டும் அதன் மூலம் தேர்தல் களில் வேட்பாளர்களாக நிறுத்தப்படக் கூடிய உரிமையை நீங்கள் பெறமுடியும் என் றார்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate