மட்டக்களப்பு கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் புதிய கல்வாரி பீட திறப்புவிழா நிகழ்வு கடந்த 22.03.2016 பங்குத்தந்தை ரொஷான் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது புதிதாக திறந்துவைக்கப்பட்ட கல்வாரி பீடம் அருட்தந்தை ஜோசெப் மேரி அடிகளாரினால் ஆசீர்வதிக்கப்பட்டு முதல் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது .
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்வாரி பீடத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலியினை இயேசு சபை துறவி அருட்தந்தை யோன் ஜோசப் மேரி, பங்கு தந்தையும் இயேசு சபை துறவியுமான ரொஷான் , இருதயபுரம் பங்குதந்தை அருட்பணி ஜெகாந்தன் ஆகியோர் இணைந்து திருப்பலியினை ஒப்புகொடுத்தனர் .
இவ்விசேட திருப்பலியில் பங்கு சபையினரும், பங்கு மக்களும் கலந்து சிறப்பித்தனர்

0 facebook-blogger:
கருத்துரையிடுக