திங்கள், 28 மார்ச், 2016

பழகாமம் வன்னியூரன் கவிஞர் த.ரமேஸ்குமார் எழுதிய நூல்களின் வெளியீடு

(பழுவூரான்)
வன்னியூரன் கவிஞர் த.ரமேஸ்குமார் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு - திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுள்ளென்ற சூரியநேர்மை எனும் கவிதை நூல் மற்றும் கூடி விளையாடுவோம் எனும் சிறுவர் நாடக நூல் ஆகியவை இன்று வெளியிடப்பட்டன.

கலாபூசணம் க.தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் பிரதம அதிதியாகவும், கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர் ஆலய பிரதம சிவ ஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் ஆன்மீக அதிதியாக கலந்துகொண்டதோடு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சி.தட்சணாமூர்தி,
போரதீவுப்பற்று பிரதேச பொதுசுகாதார வைத்திய அதிகாரி வே.குணராஜசேகரம், மேலதிக மாவட்ட பதிவாளர் அ.பேரின்பநாயகம், உள்ளிட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate