கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் இந்த உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும், அவற்றின் காலம் இன்றைய தினம் வரை ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவிக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்த பின்னர், மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாக அதிகாரங்கள் நகர ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலொன்று நடத்தப்படும் வரை அவர்களே அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக அதிகாரிகளாக செயற்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்படும் விசேட ஆணையாளர்கள், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களினால் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவதற்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகள் பெரும்பாலும் பூர்த்தியடைந்துள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒருமாத காலத்திற்குள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக