வெள்ளி, 15 மே, 2015

ஆற்றைக் கடக்க முற்பட்டவர் முதலைக்கு இரையாகி பலி

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவெட்டுவான் ஆற்றைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் முதலைக்கு இரையாகி பலியாகியுள்ளார்.

ஈரளக்குளம் வாத்தியின்வெட்டை என்ற இடத்தைச்சேர்ந்த கந்தையா பத்மநாதன்(54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மற்றுமொருவருடன் வந்தாறுமூலையில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சென்ற போது ஆற்றைக்கடப்பதற்கு தோனி இல்லாமையினால், இருவரும் ஆற்றை நீந்திக் கடக்க முற்பட்டபோதே இவரை முதலை கடித்துள்ளது.
முதலை கடித்த நபரின் சடலத்தை பொலிசார் அதிகாரிகள், உறவினர்கள் என பலரும் தேடிவருகின்றனர்.
நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இவருடன் ஆற்றைக்கடந்த மற்றையவர் அதிஸ்டவசமாக கரை சேர்ந்துள்ளார்.
ஈரளக்குளம் போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் மயிலவெட்டுவான் ஆற்றினூடாக பாதுகாப்பற்ற மீன்பிடித் தோனியில் பயணிப்பதாகவும் மாலை வேளையில் போக்குவரத்து தடைப்பட்டு இருப்பதனால் சிலர் ஆற்றை நீந்திக்கடக்க முற்படுவதாகவும்,மேலும் பலர் மறுநாள் காலையிலேயே செல்லவேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate