கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடாத்தபப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒன்றரை வருட டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (28) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. மாகாண கல்வி அமைச்சர் ரி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கிக் கௌரவித்தார். இங்கு உரை நிகழ்த்திய முதலமைச்சர் இம்மாகாணத்தில் 3900 முன்பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில் கடமைபுரியும் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகளை வழங்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் - பாடசாலையில் சிறந்த அடைவு மட்டங்களைப் பெறுவதற்கு முயற்சிக்கவேண்டுமே தவிர கட்டிடம், தளபாடம், ஆளணி போன்ற பௌதீக வளங்களை மட்டும் பெறுவதில் பாடசாலை நிர்வாகத்தினர் ஆர்வம் செலுத்தக்கூடாது. இந்நாட்டில் தற்போது மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கியதில் முக்கிய பங்கு கொண்டவர்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் ஆனால் அவர்கள் எந்தப் பயனும் இன்னும் முழுமையாக அடையவில்லை விரைவில் அனைத்து பயன்களை அடைய தமிழ் முஸ்லிம் அரச தலைவர்கள் ஒன்றுபட வேன்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் இந்திரகுமார் நித்தியானந்தன் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பாலர் கல்வி பணியக அதிகாரிகள், மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளில் கடமைபுரியும் 115 ஆசிரியையகள் டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் இந்திரகுமார் நித்தியானந்தன் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பாலர் கல்வி பணியக அதிகாரிகள், மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளில் கடமைபுரியும் 115 ஆசிரியையகள் டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் பயிற்சி நெறி கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக