வெள்ளி, 29 மே, 2015

கிரான்குளத்தில் இன்று இடம்பெற்ற விபத்து - மூவர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிராங்குளம் பிரதேசத்தின் பிரதான வளைவில் இன்று (29) வெள்ளிக்கிழமை காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்றுபேர் காயமடைந்ததுடன் , ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலையில்  அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிட்சைக்கு உட்படுத்தப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குருநாகலில் இருந்து கல்முனைக்கு மரண வீடொன்றிற்கு சென்றுகொண்டிருந்த வேன் கிராங்குளம்  பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதில் பயணித்த நபரின் தாயாரின் மரண இறுத்திச் சடங்கிற்காக கல்முனைக்கு சென்றுகொண்டிருந்த வான் சாரதி உட்பட மூவர் பயணித்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளகியதுடன் , குறித்த வேனின் முற்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. முன்கம்பமும் முறிவடைந்து சரிந்த நிலையில் உள்ளது.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624919

Translate