செவ்வாய், 13 அக்டோபர், 2015

வயலிலிருந்து கைக்குண்டு மீட்பு

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம் 12ஆம் குடியேற்றப்பகுதி நெல் வயலிலிருந்து திங்கட்கிழமை (12) கைக்குண்டொன்று மீட்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த வயலை உழுதுகொண்டிருந்த வேளையில், மண்ணுக்குள்ளிருந்து தென்பட்ட இப்பொருளை வெளியில்  எடுத்துப் பார்த்தபோது, அது கைக்குண்டெனத்  தெரியவந்தது. இது தொடர்பில் மல்வத்தை இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து வந்த கண்ணிவெடி செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் புதையுண்ட பழைய கைக்குண்டாக இருக்கலாமென்று நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate