மட்டக்களப்பு மாவட்டத்தன் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 2013ஆம்ஆண்;டு தொடக்கம் இன்றுவரை பதிவுசெய்த 700 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் சமூக சேவைகள் பணிப்பாளருமான வி.தவராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைபெற்றுச்செல்ல முயற்சிசெய்யும் பெண்களுக்கான விழிப்புணர்வுசெயலமர்வு இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் ஏற்பாட்டில் எஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் ரொட்டறிக்கழகத்தின் சமூக அபிவிருத்தி பணிப்பாளருமான வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் தலைவர் எஸ்.சிவரூபன்,எஸ்கோ நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் கே.உதயன் உட்பட ரொட்டறிக்கழக உறுப்பினர்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுச்செல்ல எதிர்பார்த்துள்ள 100க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நிகழ்வில் பங்குகொண்டனர்.
இதன்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பினைப்பெற்றுச்செல்லும்போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் தொடர்பில் கருத்துகள் பரிமாறப்பட்டன.
குறிப்பாக சட்ட ரீதியான பயணம் தொடர்பிலும் பெண்கள் செல்லும்போது அங்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர்,
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்கள் வேலைபெற்றுச்செல்வதன் மூலம் அந்நியச்செலாவணி அதிகளவில் ஈட்டப்படுகின்றது.அதிகளவான வருமானம்பெறும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் வீதம் அதிகரித்தேவருகின்றது. இலவசமாக அனுப்பிவைப்பதன் காரணமாக பெண்கள் இவ்வாறு அதிகளவில் செல்கின்றனர்.
இவ்வாறு செல்லும் பெண்களில் அநேகமானோர் சரியான வழிகாட்டல்கள் இல்லாத காரணத்தினால் அங்கு சென்று பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.சிலர் சடலங்களாக திரும்பும் நிலையும் ஏற்படுகின்றது.
இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சிகளை மேற்கொள்ளும் பெண்கள் சரியான வழிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும்.அரசாங்க திணைக்களங்களில் அதற்கான வழிகாட்டிகள் உள்ளனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் இருந்து 700 பெண்கள் வெளிநாடுகளுக்கு பதிவுகளை மேற்கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் பதிவுசெய்யாத பெண்கள் பலரும் அவ்வாறு சென்றுள்ளனர்.
பெண்கள் வெளிநாட்டுக்கு செல்லும்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.அங்கும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.இங்கு அவர்களின் குடும்பங்களும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது.
குறிப்பாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்வதை காணமுடிகின்றது.அத்துடன் குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகளும் எழுகின்றன. என்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைபெற்றுச்செல்ல முயற்சிசெய்யும் பெண்களுக்கான விழிப்புணர்வுசெயலமர்வு இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் ஏற்பாட்டில் எஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் ரொட்டறிக்கழகத்தின் சமூக அபிவிருத்தி பணிப்பாளருமான வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் தலைவர் எஸ்.சிவரூபன்,எஸ்கோ நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் கே.உதயன் உட்பட ரொட்டறிக்கழக உறுப்பினர்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுச்செல்ல எதிர்பார்த்துள்ள 100க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நிகழ்வில் பங்குகொண்டனர்.
இதன்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பினைப்பெற்றுச்செல்லும்போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் தொடர்பில் கருத்துகள் பரிமாறப்பட்டன.
குறிப்பாக சட்ட ரீதியான பயணம் தொடர்பிலும் பெண்கள் செல்லும்போது அங்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர்,
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்கள் வேலைபெற்றுச்செல்வதன் மூலம் அந்நியச்செலாவணி அதிகளவில் ஈட்டப்படுகின்றது.அதிகளவான வருமானம்பெறும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் வீதம் அதிகரித்தேவருகின்றது. இலவசமாக அனுப்பிவைப்பதன் காரணமாக பெண்கள் இவ்வாறு அதிகளவில் செல்கின்றனர்.
இவ்வாறு செல்லும் பெண்களில் அநேகமானோர் சரியான வழிகாட்டல்கள் இல்லாத காரணத்தினால் அங்கு சென்று பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.சிலர் சடலங்களாக திரும்பும் நிலையும் ஏற்படுகின்றது.
இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சிகளை மேற்கொள்ளும் பெண்கள் சரியான வழிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும்.அரசாங்க திணைக்களங்களில் அதற்கான வழிகாட்டிகள் உள்ளனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் இருந்து 700 பெண்கள் வெளிநாடுகளுக்கு பதிவுகளை மேற்கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் பதிவுசெய்யாத பெண்கள் பலரும் அவ்வாறு சென்றுள்ளனர்.
பெண்கள் வெளிநாட்டுக்கு செல்லும்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.அங்கும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.இங்கு அவர்களின் குடும்பங்களும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது.
குறிப்பாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்வதை காணமுடிகின்றது.அத்துடன் குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகளும் எழுகின்றன. என்றார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக