கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும்,நீண்ட காலம் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சராகவும் செயற்பட்ட மர்ஹூம் ஏ.ஆர்.அப்துல் காதர் ஹாஜியாரின் மறைவு குறித்து தான் ஆழ்ந்த துன்பமும் கவலையும் அடைவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும்,மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -
மர்ஹூம் முன்னாள் பிரதியமைச்சர் காதர் ஹாஜியார் மிகவும் அன்போடும்,கௌரவமாகவும் செயற்பட்ட ஒருவர் விஷேடமாக அரசியலிலே இருந்து கொண்டு கண்டி மாவட்ட மக்களுக்காக பல்வேறுபட்ட அர்ப்பணிப்புக்களையும் செய்து குறிப்பாக பள்ளிவாயல்களை பராமரிப்பது, பள்ளிவாயல்களை கட்டுவது போன்ற பல விடயங்களில் அதிக அக்கறையோடு செயற்பட்டு வந்த ஒருவர்.
நீண்ட காலமாக அரசியலிலே இருந்துவந்த ஒருவர் இப்பொழுது நோய்வாய்பட்டு மரணித்த மரணச் செய்தியை கேட்டு மிகவும் கவலையடைகிறோம்.
அல்லாஹூத்தஆலா அவருடைய கபுறை ,நல் அமல்களை அங்கீகரித்து அவருடைய கபுறை சுவர்க்கப் பூஞ்சோலையாக ஆக்க வேண்டுமென்று முதலிலே வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோடு அவரது மறைவினால் துன்பத்தோடு,துயரத்தோடு வாடி இருக்கின்ற அவருடைய மனைவி, பிள்ளைகள், குடும்பத்தவர்கள், ஆதரவாளர்கள்,முஸ்லிம்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும்,கவலைகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அல்லாஹூத்தஆலா அவருக்கு நல்ல ஈடேற்றத்தை கொடுக்க வேண்டும்,அதே போன்று அவருடைய நல்ல பணிகளை அவருடைய பிள்ளைகள்,குடும்பத்தவர்கள் தொடரந்தும் இந்த மண்ணிலே ,இந்த நாட்டிலே செய்ய வேண்டும்.
குறிப்பாக கடந்த ஆட்சிக் காலத்திலே அவர் மிக நெருக்கமாக அரசாங்கத்தோடு இருந்து செயற்ப்பட்டதன் ஊடாக பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளை அந்த மக்களுக்காக செய்த ஒருவர் ஆக அவர் செய்த பணிகளை அவருடைய குடும்பத்தவர்கள் தொடர்ந்தும் செய்ய வேண்டுமென்று மிக அன்போடு வேண்டிக் கொண்டு அவருக்காக பிரார்த்திக்கின்றோம் என அவ் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
0 facebook-blogger:
கருத்துரையிடுக