(க.சூரியகுமாரன்) கடந்த சில நாட்களாக வங்காளவிரிகுடாப் பகுதியில் தோன்றியிருந்த வளிமண்டலக் குழப்பமானது தற்போது தாழமுக்க வலயமாக வலுவடைந்துள்ளது. இது தற்போது இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடலில் காணப்படுகிறது.
இதன் தாக்கத்தினால் நாட்டின் அனேக பிரதேசங்கள் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நாட்டின் அனேகமான பகுதிகளில் கடும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைத் தீவைசுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் கடும் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று பலமானதாக வீசும். பொதுமக்கள் இந்த இடிமின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.
க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக